தம்பியை கொலை செய்த அண்ணன்!

288 0

கேகாலை , சமாஜ மாவத்தை பிரதேசத்தில் தடியொன்றால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு குடிபோதையில் இருந்த இரண்டு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு நீண்டதில் , மூத்த சகோதரர் அவரது இளைய சகோதரரை தடியொன்றால் தாக்கியுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான 40 வயதுடைய குறித்த நபர் கேகாலை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம ்தொடர்பில் தாக்குதலை மேற்கொண்ட 43 வயதுடைய மூத்த சகோதரர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கேகாலை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Leave a comment