பிறந்த குழந்தையை கழிவறை தொட்டியிலிட்ட தாய்

274 0

புதிதாக பிரசவித்த குழந்தையொன்றை கழிவறை தொட்டியிலிட்ட பெண்ணொருவர் தொடர்பான செய்தி வவுனியா பிரதேசத்தில் தெரியவந்துள்ளது.

வவுனியா – ஈச்சன்குளம் – ஈஸ்வரபுரம் பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவரே இவ்வாறு தனது குழந்தையை கழிவறை தொட்டியிலிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு இடப்பட்டிருந்த குழந்தையின் சடலத்தை நாயொன்று வெளியே இழுத்து வந்துள்ள நிலையில், அதனை பார்த்த பிரதேசவாசிகள் இது தொடர்பில் காவற்துறைக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று மாலை கழிவறையினுள் இந்த குழந்தையை பிரசவித்துள்ள அந்த பெண், குழந்தையை கழிவறை தொட்டியிலிட்டு கொலை செய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தை பிறந்தவுடனேயே இறந்து விட்டதாக அந்த பெண் காவற்துறையிடம் கூறியுள்ளார்.

இதனால் குழந்தையை கழிவறை தொட்டியிலிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண்ணின் கணவர் இரண்டு வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அந்த பெண், காவற்துறை பாதுகாப்பில் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை, வவுனியா மருத்துவமனையின் பிரேத அறையில் இன்று இடம்பெறவுள்ளது.

Leave a comment