சில பகுதிகளில் இன்று மின்சார விநியோகத்தடை

283 0
மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்சார விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை இந்த மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய, மன்னார் மாவட்டத்தில், முருங்கன்பிட்டி, மாவிலங்கேணி, பிடாரிக்குளம், அளவக்கை, வாழ்க்கைப்பட்டான்கண்டல், பள்ளங்கோட்டை, நானாட்டான், சாளம்பன், நாகசெட்டி, எருவிட்டான், அறுகுக்குன்று, நொச்சிக்குளம், அச்சங்குளம் மற்றும் டொன் பொஸ்கோ முதலான இடங்களில் மின்சார விநியோகம் தடைபடவுள்ளது.

Leave a comment