பெல்ஜியத்தில் தற்கொலைதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் சுட்டுக்கொலை

286 0

பெல்ஜியம் – ப்ரசல்ஸ் பகுதியில் தற்கொலைதாரி என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பாதுகாப்புதரப்பினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

அங்குள்ள மத்திய தொடரூந்து நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய நிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் சிறிய அளவான குண்டு ஒன்றை வெடிக்கச் செய்ததாகவும் அதன்பின்னரே அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த சம்பவத்தில் வேறு யாரும் காயமடையவில்லை.

இதனை தீவிரவாத செயற்பாடாக கருதி விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment