அர்ஜூன மகேந்திரன் மீது அரசாங்க கணக்காய்வாளர் குற்றச்சாட்டு

281 0

மத்திய வங்கி ஆளுநர் செயற்பட வேண்டிய தொழில் ரீதியான தன்மைகளின் அடிப்படையில் அதன் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் செயற்படவில்லை என அரசாங்க கணக்காய்வாளர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிணை முறி விநியோகம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று வாக்குமூலம் வழங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகத்தின்போது சட்டவிரோதமான முறையில் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்குமாயின், சம்பந்தப்பட்ட நிறுவனங்ளின் ஊடாக அது குறித்து விசாரிக்குமாறு ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment