சவுதியில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களுக்கு நிவாரணம்

376 0

air_2365591fசவுதி அரேபியாவில் நிர்கதியாகியுள்ள இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சேர்ந்த கட்டுமான பணியாளர்களுக்கான நிவாரணங்களை வழங்கஇ சவுதி அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இலங்கை இந்தியா பாகிஸ்தான் மற்றும் ஃபிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் சவுதியில் கட்டுமான நிறுனவங்களில் பணியாற்றி வந்த நிலையில் தொழில்களை இழக்க நேரிட்டிருந்தது.

எண்ணெய் விலை வீழ்ச்சியினால் பல கட்டுமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டமையே இதற்கான பிரதான காரணமாக கூறப்படுகிறது.

இதன் விளைவாக நூற்றுக் கணக்கான பணியாளர்கள் உணவு உள்ளிட்ட எந்த நிவாரணங்களும் இன்றி நிர்கதியாகியுள்ளனர்.

தற்போது அவர்களுக்கான உதவிகளை வழங்க சவுதி அரசாங்கம் முன்வந்துள்ளதாகஇ பி.பி.சி செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த நிலைமையினால் இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரத்து 700க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை நாட்டுக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.