மீனவர்களின் பிரச்சினை குறித்து ராஜதந்திர பேச்சுவார்த்தை

362 0

meenavar53இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பான ராஜதந்திர மட்ட பேச்சுவார்த்தைகள் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற இது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் பின்னர் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் வடமாகாண மீனவர்களின் பிரதிநிதிகள், மாகாண அமைச்சர் டெனீஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இரு நாடுகளின் கடற்றொழிலாளர்களின் பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளை நடத்த அனுமதிவழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கத்தினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – இந்திய கடற்றொழிலாளர் ஒத்துழைப்பு அமைப்பின் இலங்கை இணைப்பாளர் எஸ்.பி. அந்தோனிமுத்து இதனைத் தெரிவித்துள்ளார்.