மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு

373 0

shutterstock_276275120காத்தான்குடி கிரான்குளம் பிரதேசத்தில் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி காவல்துறையினர் இதனை தெரிவித்தனர்.
நீர்க்குழாய் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்குச் சொந்தமான பெக்கோ இயந்திரம் மூலம்,  வீதியோரத்தை தோண்டிய போது இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் காத்தான்குடி காவல்துறையினர் விசரணைகளை மேற்கொண்டுள்ளனர்.