தாஜூதீன் கொலை – சந்தேகத்திற்குரியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

319 0

waseem-thajudeen-640x400-720x480ரக்பி வீரர் வசிம் தாஜூடீனின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாரஹேன்பிட்டி குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் அதிகாரி மற்றும் முன்னாள் காவற்துறை மா அதிபர் ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்படி இவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.