தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளில் 42 படகுகளை விடுவிக்க நடவடிக்கை

230 0
இலங்கையின் தடுப்பிலுள்ள 11 தமிழக கடற்றொழிலாளர்களையும், 135 படகுகளையும் விடுவிக்க இந்திய அரசாங்கம் தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் நேற்று கருத்துவெளியிட்டபோது தமிழக அரசின் நிதி மற்றும் கடற்றொழில்துறை அமைச்சர் ஜெயகுமார் இதனைத் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சரினதும் மற்றும் தற்போதைய அரசினதும் ஆட்சிக் காலங்களிலும், 2 ஆயிரத்து 490 கடற்றொழிலாளர்களையும், 358 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதவேளை, இலங்கையின் தடுப்பிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளில் 42 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment