முல்லைத்தீவு நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

258 0

முல்லைத்தீவில் புதிய நீதிமன்றக் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று காலை 11.45  மணியளவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நீதி மற்றும் பௌத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நீதி மற்றும் பௌத்தசாசன பிரதி அமைச்சர் எச்.ஆர்.சாரதீ துஸ்மந்த மித்திரிபால முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எஸ் எம் எஸ் சம்சுதீன் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் உள்ளிட்டோரால்   அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர்கள், , நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a comment