வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தணிக்க சிறீதரன் முயற்சி!

247 0
வடக்கு மாகாணசபையில் ஏற்ப்பட்டிருக்கும் குழப்ப நிலையை சுமூகமாக தீர்க்கும் முகமாக பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடி வருகின்றார்.
அந்த வகையில் இன்று மதியம் யாழ்ப்பாண மறை மவட்ட ஆயர் வண.ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அடிகளாரை  அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
அத்துடன் நல்லை ஆதீனத்தின் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய ஞானதேசிக சம்பந்த சுவாமிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
குறித்த சந்திப்பில் தமிழ் மக்களுக்கு  நிலையான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுகொடுக்க வேண்டுமானால் நாம் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் இதற்காகத்தான் நாம் இலட்ச்சக்கணக்கான உயிர்களை இழந்தோம் இந்த இழப்புக்களின் மேல் நின்று நாம் எவரும் பிழையான வழிக்கு செல்லமுடியாது என்றார்.
ஆகவே நீங்களும் குறிப்பிட்ட தரப்பினருடேன் பேசுங்கள் நாங்கள் விட்டுகொடுப்புடனேயே செயற்படுகின்றோம் என்றார்.
மதத்தலைவர்களும் இக்கருத்துக்கு உடன்பட்டதுடன் தங்களால் இயன்ற பங்களிப்பை செய்வதாகவும் குறிப்பிட்டனர்

Leave a comment