கடவுச்சீட்டின்றி இருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது

233 0

செல்லுபடியான கடவுச்சீட்டின்றி இருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் பண்டாரகம, வெல்மில்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பண்டாரகம் காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

55 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று(17) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், பண்டாரகம காவல் துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment