மும்பை – கோவா பாலம் இடிந்து வீழ்ந்தது

350 0

mumbai-bridge-collapse-03-1470227472மும்பை – கோவா நெடுஞ்சாலையில் உள்ள பழமையான பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது.

இதில் 22 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் கடுமையான மழை பெய்வதன் காரணமாக, சாவித்திரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே குறித்த பாலம் இடிந்து வீழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பேருந்து ஒன்று உள்ளிட்ட சில வாகனங்கள் ஆற்றில் வீழ்ந்ததாக கூறப்படுகிறது.

மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.