லசந்த கொலை – இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சிப்பாயின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

327 0

NRLQIJeஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவின் சிப்பாயின் விளக்கமறியல் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைய அவரை எதிர்வரும் 11ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜுலை மாதம் 16ஆம் திகதி வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக சென்ற வேளையில், குற்றப்பு புலனாய்வு திணைக்களத்தால் அவர் கைது செய்யப்பட்டார்.

இதனை அடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், அடையாள அணிவகுப்பில் ஈடுபடுத்தப்பட்டதுடன், அவரை லசந்த விக்ரமதுங்கவின் சாரதி அடையாளம் காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.