இலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியம்

341 0

anumanஇலங்கைக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலம் அமைக்கப்படுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் இடம்பெறும் உலக முஸ்லிம் பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்துள்ளார்.

மன்னாருக்கும், தமிழ் நாட்டுக்கும் இடையிலான பாலத்தை அமைக்கும் திட்டம் இருக்கிறது.

இது குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

விரைவில் இந்த பாலம் அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.