விமானப் படை சிப்பாயின் சடலம் மீட்பு

343 0

airபொல்கொடை ஆற்றில் மிதந்த நிலையில், விமானப் படை சிப்பாயின் சடலமொன்று பாணந்துறை பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர், இரத்மலானை விமானப் படை முகாமில் கடைமையாற்றும் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சடலத்திலிருந்து அலைபேசி, அடையாள அட்டை இரண்டு என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று உயிரிழந்தவரின் அடையாள அட்டை எனவும் மற்றையது அவரது மனைவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மரணமடைந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.