வட்டுவாகல் காணி சுவீகரிப்பு பொது மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

491 0

vaddu 3முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617.331 ஏக்கர் காணிகளை கடற்படையினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கு, இன்று மேற்கொள்ளப்படவிருந்த நிலஅளவை பணி,பொது மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. காலை முதல் அங்கு கூடிய மக்கள், வட்டுவாகல் பாலத்தை அண்மிய பகுதியில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இதனால், காணி அளவீடு செய்ய வந்த அளவீட்டாளர்கள் அளவீட்டை கைவிட்டுத் திரும்பிச் சென்றனர்.

புதன்கிழமை ஆரம்பிக்கப்படும் நில அளவை, 5 ஆம் திகதி வரை தொடர்ந்து காலை முதல் மாலை வரை மேற்கொள்ளப்படும் என்றும், அந்தப் பகுதியிலுள்ள காணி உரிமையாளர்கள் யாராவது இருப்பின் அவர்கள் உரிய ஆவணங்களுடன் நில அளவை செய்யப்படும்போது அங்கு சமூகமளிக்குமாறு அரச நில அளவையாளர் பா.நவஜீவன் எழுத்து மூலம் அறிவித்திருந்தார். அதற்கமைய அங்குகூடிய மக்கள் எதிர்பை வெளிக்காட்டி நிலஅளவையாளர்களை பணி செய்யாமல் தடுத்தனர்.

இலங்கை அரசின் பங்காளிகளாக இருந்து கொண்டு மக்கள் போராட்டங்களில் எதற்காகப் புகைப்படங்களிற்கு போஸ் கொடுக்க வருகின்றீர்களென்ற தமிழ் மக்களது கேள்விகளால் தலைகுனிந்தவாறு நின்றிருந்தனர் தமிழ் மக்கள் பிரதிநிதிகள்.வட்டுவாகலில் கோத்தா கடற்படை தளத்திற்கான இடம்பிடிக்க ஏதுவாக நடைபெறவிருந்த நில அளவை மக்கள் போராட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட மக்களது போராட்டத்தில் அரசியல் தலைவர்களும் தாமாக வந்து தமது புகைப்பட கலைஞர்கள் மூலம் படம்பிடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர். அவர்கள் எடுத்த புகைப்படங்கள் ஊடகவியலாளர்களது மின்னஞ்சல்களை நிறைத்துள்ளது.

vaddu 2

இவர்களுள் வருகை தந்த கூட்டமைப்பின் கதிரைகளினை அலங்கரிப்பவர்களுள் செல்வம் அடைக்கலநாதன் ஒருவர். நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரான அவர் நாடாளுமன்றில் பேசமுடியாது தொண்டை கட்டிய நிலையில் இன்று தம்மிடம் வந்ததாக மக்கள் பகிரங்கமாகச் சொன்ன விமர்சனத்தைத் தெரிந்தும் தெரியாதே குனிந்தவாறு சென்றார்.இலங்கையின் சிங்கக்கொடியேற்றுவதைப் பெருமையாகச் சொன்ன வடமாகாணசபையின் பிரதி அவை தலைவரான அன்ரனி ஜெகநாதன் இப்போது இலங்கையனாக இருப்பதாக அண்மையில் தான் மன்னாரில் சவால் விடுத்திருந்தார்.அவரும் வந்திருந்தார்.

கள்ளமரம் தறிப்பு, மகனுக்கு காணி பிடிப்பென புகழ்பெற்றிருக்கும் சாந்தி சிறீஸ்கந்தராசா முதல் இந்திய நடிகர்களை கொண்டு வந்து ஈழக்கலை வளர்த்த சிவமோகன் வரை முகங்களை தொங்கப்போட்டவாறாக புகைப்பட படப்பிடிப்பில் மும்முரமாக நின்றிருந்தனர்.இவர்கள் எவருமே பெரும்பாலும் நாடாளுமன்ற பக்கம் செல்லாதவர்களாகவும் அங்கு இவை பற்றி வாயத் திறக்காதவர்களாகவும் இருந்து கொண்டு பின்னர் இங்கு எதற்கு வருகின்றீர்கள் என்ற கேள்வி அவர்களைத் துளைத்தாக அல்லது எருமை மாட்டு மழைக்கதையா என்பது தெரியத்தான் போகின்றது.

vaddu 1