உலகில் தற்கொலை அதிகமுள்ள 5 நாடுகளில் இலங்கையும்

364 0

80097ebe8c0f09289594adcc7137d850b29உலகில் அதிகமாக தற்கொலை இடம்பெறும் முதல் ஐந்து நாடுகளுக்குள் இலங்கையும் உள்ளடங்கியிருப்பதாக களனி பல்­க­லைக்கழ­கத்தின் வெகு­சனத் தொடர்புத்­துறை பேரா­சி­ரியர் கலாநிதி ரோஹன லக் ஷ்மன் பிய­தாச தெரி­வித்தார்.

தற்கொலைக்கு உடல் மற்றும் மன ரீதியான அழுத்தங்களே காரணம் எனவும் இதனை நிவர்த்தி செய்வதற்கு யோகா சிறந்ததொரு கலை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,இன்று எமது நாட்டில் வாழும் உயர் மட்ட மக்களிடம் மன அழுத்தங்கள் காணப்பட்டாலும் அதனை நிவர்த்திசெய்ய அவர்கள் பல வழிமுறைகளைக் கையாள்கின்றனர்.ஆனால், மந்திய மற்றும் கீழ் வர்க்க மட்டங்களில் உள்ளவர்களுக்கு அவ்வாறான வசதி வாய்ப்புக்கள் அமைவதில்லை. அவர்கள் தற்கொலையையே நாடுகின்றனர்.

இதன் ஓர் விளைவாகவே உலகிலே தற்கொலை செய்துகொள்ளும் முதல் ஐந்து நாடுகளுக்குள்ளும் இலங்கையும் அடங்கியுள்ளது.இவ்­வா­றான மன அழுத்­தங்­களை போக்கி மன­தையும் உட­லையும் சம நிலைப்படுத்தி ஆரோக்கியமான ஒரு நிலைக்கு கொண்டு வரு­வ­தற்கு யோகா உடற் பயிற்சி முறை மிக முக்கியத்துவம் பெறு­கின்­றது.

எனவே, அனைவரும் யோகாசனப் பயிற்சியைப் பெறவேண்டுமெனவும், இதனால் உடலையும் உள்ளத்தையும் எமது கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.