முதலமைச்சருக்கு 18பேர் ஆதரவு 15 பேர் எதிர்ப்பு!- எம்.கே.சிவாஜிலிங்கம்

251 0

வடமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 15பேர் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சருக்கு ஆதரவாக 18 பேர் கையொப்பமிட்டு ஆளுநரிடம் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அரசாங்கத் தரப்பு எதிர்க்கட்சியினரை இணைத்துக்கொள்வது தொடர்பாக தமிழரசுக்கட்சி பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சருக்கு ஆதரவாக 18பேர் கையெழுத்திட்ட கடிதம் கொடுக்கப்பட்டபோது வட மாகாண சபை அமவினை நடாத்தாது முதலமைச்சர்மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரமுடியாது என ஆளுநர் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment