நட்டையீட்டை முழுமையாக வழங்க இணக்கம்

475 0

4128dac3-e2fa-403d-a4da-f1329bfb847aசாலாவ ஆயுதக்களஞ்சியை சாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நட்டையீட்டை முழுமையாக வழங்க திறைசேரி இணக்கம் வெளியிட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஆயிரத்து 404 வீட்டு உரிமையாளர்களுக்கும், ஒருலட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் 390 வீட்டுரிமையாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

அத்துடன், 10 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்ட 237 வீட்டு உரிமையாளர்களுக்கான நட்ட ஈடும் முழுமையாக வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.