நாடாளுமன்ற குழு ஒன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது

349 0

17-1439790303-srilanka-parliament57தென்னாப்பிரிக்காவின் அரசியல் யாப்பில், உள்ளடக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கான சரத்துகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, இலங்கையில் இருந்து குழு ஒன்று தென்னாப்பிரிக்கா சென்றுள்ளது.

புதிய அரசியல் யாப்பு தயாரிப்புக்கான, அடிப்படை உரிமைகளை உரிய முறையில் அமுல்படுத்தவேண்டும் என்ற நோக்குடன் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் உப குழுவின் உறுப்பினர்கள், இந்த விஜயத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன, வைத்தியக்கலாநிதி துசித்த விஜயமான்ன, ஏ.அரவிந்தகுமார், எஸ். சிறிதரன், அத்துரலியே ரத்தினதேரர், சல்மான் ஆகியோர் இந்த குழுவில் உள்ளடங்குகின்றனர்.

அவர்கள், நாளை முதல் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு தென்னாப்பிரிக்காவின் சட்ட மா அதிபர், உயர் நீதிமன்ற நீதியரசர்கள் உள்ளிட்ட பலரை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.