திருக்கேதீஸ்வரம் – மாந்தை மர்ம கிணறு இன்றும் தோண்டப்படவுள்ளது

369 0

DSC_0104மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட கிணற்றை அகழும் பணிகள் இன்று மூன்றாம் நாளாகவும் இடம்பெறவுள்ளது.

நேற்று வரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் எலும்புத்துண்டுகள், பல், முற்கம்பிகள், பாவிக்கப்படாத துப்பாக்கி ரவை உள்ளிட்ட சில பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.

கிணற்றில் நீர் வெளியேற ஆரம்பித்தமையால் நேற்றைய அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு, மீண்டும் இன்றையதினம் அகழ்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.