லிபியாவில் தற்கொலை குண்டு தாக்குதல்

461 0

lybலிபியா – பெங்காசி நகரில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 18 பேர் பலியாகினர்.

பெங்காசியில் உள்ள அல்- குவார்சா பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிபிய பாதுகாப்பு தரப்பினரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை பெங்காசியின் புரட்சிகர சூரா கவுன்சில் அமைப்பின் தீவிரவாதிகளே மேற்கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.