லிபியாவில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான் தாக்குதல்

387 0

21லிபியாவில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் தளங்கள் மீது, ஐக்கிய அமெரிக்காவின் வான்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

லிபியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் பின்புலத்தைக் கொண்ட படையினர் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன்படி லிபியாவின் – ஷேர்ட் நகரில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளின் பலப்பிரதேசத்தில் வான் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் தீவிரவாதிகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக, லிபியாவின் பிரதமர் ஃபயாஸ் சராஜ் தெரிவித்துள்ளார்.

லிபியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் வளர்ச்சி மிதமிஞ்சி செல்கின்றமை தொடர்பில் மேற்குலக நாடுகள் கரிசனைக் கொண்டுள்ளன.

இதன்படி லிபியாவில் அமெரிக்கா நடத்தும் முதலாவது தாக்குதல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.