இந்திய குடியுரிமை வழங்க கோரி ஈழ அகதிகள் ஆர்ப்பாட்டம்

386 0

india 114714தங்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்கக் கோரி, தமிழகத்தில் உள்ள ஈழ அகதிகள் சிலர் சென்னை – எக்மோரில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இந்தியாவின் ‘த வன்மினிட் நியுஸ்’ என்ற இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

சுமார் 600 அகதிகள் இதில் பங்குபற்றி ,ருந்தனர்.

தாங்கள் தமிழகத்துக்கு அதிகளாக பிரவேசித்து மூன்று தசாப்த காலங்கள் நிறைவடைந்துள்ளன.

தங்களுக்கான இந்திய குடியுரிமை இன்னும் வழங்கப்படவில்லை.

இதனால் தங்களின் பிள்ளைகள் கற்கைகளை நிறைவு செய்த பின்னரும், அவர்களுக்கு தொழில்வாய்ப்புகளை பெற முடியாதிருக்கிறது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.