லசந்த விக்ரமதுங்க படுகொலை – முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர்களிடம் மீண்டும் விசாரணை

346 0

lasantha-wickramatungaஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பில், ஏற்கனவே விசாரணை செய்யப்பட்ட முன்னாள் பிரதி காவற்துறை மா அதிபர்கள் இரண்டு பேர் மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்படவுள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் முன்னாள்காவற்துறை மா அதிபர் மகிந்த பாலசூரிய கடந்த வாரம் 5 மணித்தியாலங்கள் வரையில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

இந்த கொலை சம்பவத்தை மறைப்பதற்கான உத்தரவை அதிகாரம் பொருந்திய ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு முன்னைய ஆட்சி காலத்தில் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவல்களை திரட்டும் நோக்கிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருந்தது.

இதனை அடுத்து குறித்த இரண்டு பேரையும் மீண்டும் விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.