நெதர்லாந்து icc முன்றலில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மே 18 – தமிழின அழிப்பு நாள்!!!

300 0

அனைத்துலகத்தின் உதவியுடன் தமிழீழமக்களை இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்த மே 18 யை இலங்கை அரசாங்கத்திற்கும் அதற்கு உதவிய உலக நாடுகளுக்கும் எடுத்துரைக்கும் நிகழ்வாக மே 18 2017 அன்று நெதர்லாந்து டென்ஹாக் icc முன்றலில் நெதர்லாந்து வாழ் தமிழீழ மக்களால் இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான வணக்க நிகழ்வும் நடைபெற்றது.
நெதர்லாந்து தமிழர் பேரவையால் நடத்தப்படட கவனயீர்ப்பு நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், ஈகைச்சுடரேற்றல் அகவணக்கத்துடன் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து சிறப்புரைகளும்
இனப்படுகொலை சம்பந்தமான துண்டுப்பிரசுரங்களை நெதர்லாந்து மக்களுக்கு விநியோகித்தபடியும் எமக்கான நீதி மறுக்கப்பட்டிருப்பதை எடுத்துரைக்கப்பட்ட்து . மதியம் 13 :00 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வு 15 :00 மணிக்கு நிறைவுபெற்றது.