ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

362 0

unnamed-900x450மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுவப்பங்கேணி பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று அதிகாலை கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிவந்த ரயிலில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் புன்னைச்சோலையை சேர்ந்த 22வயதையுடைய யோ.துஸ்யந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.டலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணையை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகி;ன்றனர்.