ஆடு பிரச்சினை – வால் வெட்டு மூவர் படுகாயம்

245 0

திருகோணமலை – கன்னியா கிளிகுஞ்சு மலை பகுதியில் நேற்று மாலை இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கன்னியா – மாங்காயூற்று பகுதியைச்சேர்ந்த டி.ஜானகி (59வயது) அவரது மகனான டி.பிரபாகரன் (42வயது) மற்றும் கன்னியா. கிளிகுஞ்சுமலை பகுதியைச்சேர்ந்த ஆர்.குகதாஸ் (26வயது) ஆகியோர் எனவும் தெரியவருகின்றது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது படுகாயமடைந்த 26 வயதுடைய நபர் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளை வீதியால் சென்ற ஆட்டுடன் மோதியதாகவும் அதனையடுத்து ஆட்டு உரிமையாளருடன் ஆட்டை ஒழுங்காக பார்க்கவும் என தெரியப்படுத்தியதையடுத்து இருவருக்குமிடையில் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதாகவும் தெரியவருகின்றது.

கைகலப்பை தடுக்க வந்த தாயொருவரும் தலையில் வாள் வெட்டு காயங்களுக்குள்ளானதாகவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் குறித்து உப்புவெளி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.