ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பாது­காக்க விசேட திட்டம்

262 0

ஊட­க­வி­ய­லா­ளர்­களை அவர்கள் எதிர்­கொள்ளும் அச்­சு­றுத்­தல்கள், அழுத்­தங்கள் மற்றும் அநி­யா­யங்­களில் இருந்து பாது­காக்கும் விசேட சட்டப் பிரி­வொன்­றினை இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் உரு­வாக்­கி­யுள்­ளது.

இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் சட்­டத்தின் ஆட்சி தொடர்­பி­லான குழுவின் கீழ் உரு­வாக்­கப்பட்­டுள்ள சிறப்புக் குழுவே ஊட­க­வி­ய­லா­ளர்­களைப் பாது­காக்கும் பொறுப்பை ஏற்­றுள்­ள­தாக இலங்கை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்தின் செய­லாளர் அமல் ரந்­தெ­னிய தெரி­வித்தார்.

சட்­டத்­த­ர­ணிகள் சங்கத் தலைவர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி யூ.ஆர்.டி. சில்வா, உப தலைவர் ஜன­ாதி­பதி சட்­டத்­த­ரணி அலி சப்ரி உள்­ளிட்­டோ­ருடன் சங்­கத்தின் தலை­மை­ ய­கத்தில் நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே அமல் ரந்­தெ­னிய இதனைத் தெரி­வித்தார்.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் எதிர்நோக்கும் அச்­சு­றுத்­தல்கள், அழுத்­தங்கள் மற்றும் சிக்­கல்கள் தொடர்பில் இல­வச சட்ட ஆலோ­சனை, சட்ட உத­வி­களை எழுத்து மூலமும் வழங்­கவும் தேவை ஏற்­படின் சட்ட நட­வ­டிக்கை தொடர்பில் தமது சங்க சட்­டத்­த­ரணி ஒரு­ வரை இல­வ­ச­மாக மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­க­ப்படும் என அமல் ரந்­தெ­னிய சுட்­டிக்­காட்­டினார்.

இது தொடர்பில் அர­சாங்க வர்த்­த­மானி அறி­வித்தல் பிர­காரம் ஊட­க­வி­ய­லாளர் என்­பவர் யார் என்­பது தீர்மானிக்கப்படும் எனவும், சட்ட உதவிகளைப் பெற சட்டத்தரணிகள் சங்கத்தில் உள்ள விண்ணப்பத்தை நிரப்பிக் கொடுக்க முடியும் எனவும் அமல் ரந்தெ னிய சுட்டிக்காட்டினார்.