வெள்ளவத்தை கட்டட விபத்து தொடர்பில் UDA விசாரணை ஆரம்பம்

216 0

வெள்ளவத்தையில் நேற்று கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த கட்டடத்தை நிர்மாணிக்கும் போது பொருத்தமான கட்டட ஒழுங்குமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இந்த விசாரணைகள் மென்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்டட நிர்மாணத்துக்கு அனுமதி பத்திரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதா என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர் பேராசிரியர் ஜகத் முனசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த கட்டட விபத்தால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 24 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.