சைட்டம் வேண்டுமா அல்லது மாணவர்கள் வேண்டுமா?

259 0

சைட்டம் வேண்டுமா அல்லது மாணவர்கள் வேண்டுமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். சைட்டத்தை தெரிவு செய்துகொண்டு நடைமுறையை தீர்மானிக்க வேண்டும். அல்லது  மாணவர்களின் பிரச்சினையை கவனத்தில் கொண்டு சைட்டத்தை கைவிட வேண்டும்.

மாணவர்களை கட்டுப்படுத்த ஆயுதத்தை கையில் எடுத்தால் அதுவே அரசாங்கத்தின் இறுதியாக அமையும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்