யுத்தப்பாதிப்பிற்குள்ளானோருக்கு 50 வீடுகள் கையளிப்பு

269 0

மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் தலைமையில் இயங்கும் ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேசன் அனுசரனையில் சுனாமி மற்றும் பாதிக்கப்பட்டும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒல்லிக்குளம் பகுதி மக்களுக்கென நிர்மாணிக்கப்பட்ட 50 வீடுகள் நேற்று வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்டன.

இடமபெயர்ந்து மீண்டும் தமது சொந்த இடங்களில் குடியேறி குடிசைகளிலும் கொட்டில்களிலும் வாழ்ந்த ஒல்லிக்குளம் மேற்கு , ஒல்லிக்குளம் கிழக்கு , கிச்சம்பள்ளம் , மண்முனை ஆகிய பிரதேச மக்களுக்கு அமைக்கப்பட்ட வீட்டுத்தொகுதியே இவ்வாறு வழங்கப்பட்டன.

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புழ்ழாஹ் அதனைத் திறந்துவைத்தார். இந் நிகழ்வில் ஹிரா பௌண்டேசன் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி உட்பட பாடசாலை அதிபர்கள் கல்விமான்கள் ஊர் பிரமுகர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.