போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்!

273 0

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நகர மண்டபத்துக்கு அருகில் மாணவர்கள் பேரணியாக சென்றபோதே குறித்த கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைட்டம் தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம் முன்னெடுத்துள்ள நிலையில், கொழும்பில் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.