நாவலர் வீதியில் மாணவி ஒருவர் அணிந்திருந்த சங்கிலி திருட்டு

318 0
 நாவலர்வீதியில் அன்னசந்திரலேன் தொடக்கப்பகுதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த மாணவி ஒருவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியினை மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
நாவலர் வீதிவழியாக தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு துவிச்சக்கர வண்டியில்  பயணித்த மாணவி ஒருவர் 2 பவுன் தங்கச் சங்கிலி ஒன்று அணிந்து சென்றுள்ளார். இதனை அவதானித்த இரு இளைஞர்கள் ஓர் மோட்டார் சைக்கிளில் வேகமாக பின்தொடர்ந்து வந்து சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தினில் சங்கிலியை பறிகொடுத்த மாணவி எழுப்பிய கூக்கூரலையடுத்து அயலில் உள்ளவர்கள் விரைந்து வந்தபோதும் திருடர்களைப் பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து சங்கிலியை பறிகொடுத்தவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.-