யாழ்ப்பாணத்தில் விபத்து – மாணவன் பலி

240 0

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் இன்று முற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவனொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து வண்டி ஒன்று பாலக்காட்டுச் சந்தியில் வைத்து ஈருருளியில் சென்ற மாணவன் மீது மோதியுள்ளது.

விபத்தில் 16 வயது மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து அப்பகுதியில் ஒன்றுதிரண்ட மக்கள் குறித்த பேருந்தை சேதப்படுத்தியதாகவும், இதனால் அங்கு இயல்பற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.