நீதிமன்ற தடையை மீறி பல்கலைக்கழக மாணவர் ஆர்ப்பாட்டத்தில்

457 0

நீதிமன்ற தடை உத்தரவை மீறி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

மாலபே மருத்துவக் கல்லூரியை மூடுமாறு கோரிக்கை விடுத்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் இன்றும் நாளையும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்தநிலையில், கொழும்பில் இன்றும், நாளையும் ஆர்ப்பாட்டங்களை நடத்த கொழும்பு பிரதான நீதவானின் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை உத்தரவொன்றை பிறப்பித்தது.

எனினும், நீதிமன்ற உத்தரவை கருத்திற்கொள்ளால் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.