தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்தார் மஸ்தான் எம்.பி

254 0
வவுனியாவில் தொடர் போராட்டத்தில்ஈடுப்பட்டு வரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் இன்று  நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடினார்.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களால் மஸ்தான் எம்பியிடம்  தங்களது காணாமல் போன  உறவினர்களை மீட்டுத்தர உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், தாம் திருப்திப்படும் சாதகமான பதில் கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.