தமிழ் இளைஞர்கள் காணாமல் செய்யப்பட்ட சம்பவம் – கடற்படை கெப்டன் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பெற ரகசிய காவற்துறைக்கு அனுமதி

232 0

இரண்டு தமிழ் இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை கெப்டன் தர அதிகாரி உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பெற்று கொள்ள ரகசிய காவற்துறைக்கு அனுமதி வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான உத்தரவு கொழும்பு மேலதிக நீதவானினால் இன்று கடற்படை தளபதிக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஐந்து அதிகாரிகளும் வாக்குமூலம் வழங்க மறுப்பு தெரிவித்து வருவதாக குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வெலிசர கடற்படை மருத்துவமனையின் நிறைவேற்று பணிப்பாளர் லெப்டினன் கொமான்டர் தம்மிக மாபாவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.