அதிவேக வீதிகளில் விதி மீறல் – 19,837 சாரதிகள் கைது

300 0

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், அதிவேக வீதிகளில் சட்டத்தை மீறி பயணித்த 19 ஆயிரத்து 837 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, பாதுகாப்பற்ற மற்றும் அபாயகரமாக வாகனத்தை செலுத்தியமை மற்றும் அதிவேகம் உள்ளிட்ட 21 குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்ட அபராத சீட்டு மற்றும் தண்டபணத்தால் 99 லட்சத்து 19 ஆயிரத்து 930 ரூபா வருமானமாக கிடைக்கப்பெற்றுள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.