கிளிநொச்சி கத்தி குத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

244 0

கிளிநொச்சி கனபுரத்தில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி கனபுரம் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலால் வர்த்தகர் ஒருவர் பலியானார்.

சம்பவத்தில் அவரது மனைவி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மதியம் கனகபுரம் பழைய சந்தைக்கு அருகில் இடம்பெற்ற இந்த கத்தி குத்து சம்பவத்தின் போது கிளிநொச்சி உதயநகர் பகுதியை சேர்ந்த வர்த்தகரே பலியானார்.

தாம் வாடகைக்கு நடாத்தி வந்த வர்த்தக நிலையத்திற்கான முற்பணத்தை மீளப்பெற்று கொள்ளும் நோக்கில் குறித்த வர்த்தகரும் அவரது மனைவியும் வர்த்தக நிலைய உரிமையாளரிடம் இன்று மதியம் சென்றுள்ளனர்.

இதன்போது ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் போதே இந்த கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.