பிரபல உயர்தர பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்தல் தொடர்பில் அறிக்கை கோர கல்வியமைச்சு தீர்மானம்

221 0

பிரபல உயர்தர பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்வது தொடர்பான முறைமை குறித்த அறிக்கையை கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

உயர்கல்விக்காக ஏனைய பாடசாலைகளில் இருந்து பிரவேசிக்கும் மாணவர்களுக்காக நேர்முக தேர்வின் போது வழங்கப்படும் புள்ளி முறைமை மற்றும் பாடசாலைகளினால் அறவிடப்படும் நிதி தொடர்பான முழுமையான அறிக்கை என்பன கல்வியமைச்சினால் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வியமைச்சர் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் இடம்பெறும் நேர்முக தேர்வு மற்றும் மாணவர்களிடம் அறவிடப்படும் நிதி என்பன தொடர்பாக கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.