நுகேகொடை – நாவல பகுதியில் ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு அவர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் பெறுமதி 75 லட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.