விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி

255 0

மீபே – இங்கிரிய பிரதான வீதியின் அங்கம்பிட்டிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர்.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இங்கிரியவிலிருந்து மீபே நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விபத்துக்குள்ளானதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

வேக கட்டுப்பாட்டை மீறியமையே விபத்துக்கான காரணம் என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.