கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக, கயஸ் வாகனம் தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இதன்போது வாகன சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
கிளிநொச்சி திருநகர் பகுதியில் இருந்து, ஏ 9 வீதி ஊடாக இரணைமடு நோக்கி சென்றுகொண்டிருந்த போது, வீதியை குறுக்காச் சென்ற நாயினை காப்பாற்ற முற்பட்ட வேளை, வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்தில் கயஸ் வாகனம் பெரும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.