மியன்மாரின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இலங்கை உதவ வேண்டும்

265 0
மியன்மாரின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இலங்கையிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது.
மியன்மார் அரச தலைவர் ஆங் சான் சூகி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
சீனாவில் வைத்து இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த சூகி, தமது நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த இலங்கை உதவ வேண்டும் என கோரியுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மியன்மாரின் ஜனநாயக உறுதிப்படுத்தலுக்கு இலங்கை உதவும் என்று உறுதியளித்துள்ளார்.
அத்துடன் ஆங் சான் சூகிக்கு இலங்கை வருமாறும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.