வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலால் நபரொருவர் காயம்

224 0

மோதர – கல்வல சந்திக்க அருகில் உள்ள பிரதேசத்தில் வீடொன்றில் இன்று காலை ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அங்கிருந்த நபரொருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

எனினும் தீப்பரவல் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்த தீப்பரவல் காரணமாக ஒரு மணிநேரம் அளவில் மோதர – அளுத்மாவத்தை வீதியின் ஒரு மருங்கு மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.