நாசியில் பொத்தான் ஒன்று அடைத்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற குழந்தையொன்றை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கதிர்காமம் பிரதேசத்திற்கு பொறுப்பான மருத்துவ அதிகாரியொருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்றரை வயதான குழந்தை ஒன்றே பொத்தான் ஒன்று நாசியில் அடைத்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க முயற்சிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மருத்துவர் மீது ஏற்கனவே இவ்வாறான முறைப்பாடுகள் பல பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.