வைத்திய சபையில் கைக்குண்டு: 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு

244 0

இலங்கை வைத்திய சபை கட்டடத்தில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட சம்பவம் தொடர்பில், தற்போது வரை 10க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்த விசாரணைகளை முன்னெடுத்து வரும், கொழும்பு குற்றப் பிரிவு மற்றும் மருதானை பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, சம்பவம் இடம்பெற்ற அன்று அங்கிருந்த காவலாளி மற்றும் அருகிருந்த சிலரிடமுமே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்திய சபை கட்டத்திற்கு அருகில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.